செல்வந்தர்களிடம் அமைச்சர் சுதர்ஷனி விடுத்த கோரிக்கை

கொவிட்−19 நோயாளிகளுக்கான வைத்தியசாலைகளில் தேவையான வசதிகளை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோவிட்19 தடுப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே செல்வந்தர்களிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

வைத்தியசாலைகளில் ஒட்சிசனுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவு எண்ணிக்கைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அதற்கான உபகரணங்கள் அதிகளவில் தேவைப்படுவாதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது பிரதேசங்களில் காணப்படும் வைத்தியசாலைகளுடன் இணைந்து தேவையான உதவிகளை வழங்குமாறு செல்வந்தர்களிடம் அமைச்சர் கோரியுள்ளார்.

Mon, 05/17/2021 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை