கார் விபத்தொன்றில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (06) 11.30 மணியளவில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியாங்குளம் பகுதியில் வைத்தே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் குறித்த பகுதியால் செல்லும் போது அதிவேகமாக பயணித்ததில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய தனியார் பஸ் உரிமையாளரும் மற்றும் அவருடன் பயணித்த 30 வயதுடைய பெண் ஒருவருமே பலியாகியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வாழைச்சேனை தினகரன் நிருபர் - எச்.எம்.எம். பர்ஸான்)
from tkn