பாகிஸ்தான் தலைநகரில் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல்

மதநிந்தனை குற்றச்சாட்டில் தடுத்துவைத்திருக்கும் ஒருவரை படுகொலை செய்யும் முயற்சியாக பாகிஸ்தான் தலைநகரில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொல்லுகள், இரும்புக் கம்பிளுடன் வந்த ஊர் மக்கள் பொல்ரா பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபரை தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு விரைந்த மேலதிக பொலிஸார் சந்தேக நபர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளை காப்பற்றியுள்ளனர்.

மத நிந்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேக நபரை பொலிஸார் ரகசிய இடம் ஒன்றுக்கு மாற்றியுள்ளனர்.

Thu, 05/20/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை