‘ஆறுமுகன் தொண்டமான் புலமைப்பரிசில்’ திட்டம்

- ஜீவன் ஆரம்பித்து வைப்பு

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 57ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்படுவதையொட்டி தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் ‘ஆறுமுகன் தொண்டமான் புலமைப் பரிசில்’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இ.தொ.காவின் இளைஞர் அணி ஏற்பாட்டில் இந்த புலமைப் பரிசில் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மலையகத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கு தெரிவான மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக இந்த புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. அத்தோடு நாட்டில் நிலவும் covid-19 நிலைமையை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட இம்மாணவர்களின் வங்கிக் கணக்கில் புலமைப்பரிசில் பணம் வைப்பிலிடப்படவுள்ளது. 
இதன் மூலம் இவர்கள் எதிர்காலத்தில் அவர்களின் உயர் கல்வியை தொடர்வதற்கு உந்து சக்தியாக இது அமையும். 

அதேபோல் மலையகத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக மடிக் கணணிகள் இன்னும் இரு வாரங்களில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

Mon, 05/31/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை