மே மாத ஓய்வூதியம் இன்றும் நாளையும்

தபாலகங்களில் 09.30 முதல் 2.00 மணி வரை பெறலாம்

கொவிட்19 தொற்று பரவலின் நெருக்கடியான நிலைமையின் காரணமாக தபால் சேவைகள் ஊடாக அனுப்பப்படும் ஓய்வூதிய கொடுப்பனவு, விவசாய மற்றும் மீனவர் ஓய்வூதியம், முதியவர்களுக்கான கொடுப்பனவு உட்பட ஏனைய கொடுப்பனவுகளை வழங்குதற்காக இன்று 28, நாளை 29ஆம் திகதிகளில் தபால் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்குமென தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. கொவிட்19 ஒழிப்பு செயலணியின்  அனுமதியுடன் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், உரிய அடையாள அட்டைகளை எடுத்துவருவதன் ஊடாக கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும். போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்பவர்கள் 1950 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திறக்கு அழைப்பை ஏற்படுத்தி உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தேசிய தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

Fri, 05/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை