ரியாஜ் பதியுதீன் அடிப்படை உரிமை மனு தாக்கல்

எந்தவொரு காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பீ ஜயசேகர, அதன் பணிப்பாளர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

Fri, 05/21/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை