சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து

எம்.பிக்கு எதுவுமில்லை; வாகனத்திற்கு சேதம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயணித்த வாகனம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று விபத்துக்குள்ளாகியது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த போது நேற்று அதிகாலை 3.45 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வாகனம் முழுமையாக சேதமடைந்தபோதும் தமக்கோ வாகனத்தில் பயணித்த ஏனையோருக்கோ எந்த பாதிப்பும் இல்லையென, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். விபத்தையடுத்து வேறொரு வாகனத்தின் மூலம் அவர் பயணத்தை தொடர்ந்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமைக்காக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த வழக்கில் ஆஜராகும் நோக்குடன் அவர் செல்லும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

Sat, 05/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை