- பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக மே மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tue, 05/11/2021 - 08:22
from tkn