மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கு அறிவிப்பு

மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் விநியோக இடைநிறுத்த ம் ஜூன் 06 வரை நீடிப்பு-Suspension of Issuing vehicle renewable licence extended till June 6

- ஜூன் 06 வரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படாது
- ஜூன் 30 வரை அபராதம் செலுத்துவது விலக்களிப்பு

மேல் மாகாணத்தில் வாகன  வருமான அனுமதிப்பத்திர விநியோக இடைநிறுத்தம் ஜூன் 06 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

கொவிட்-19 பரவல் நிலை மற்றும் அது தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரம் விநியோகிப்பது, மே 28 வரை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அதற்கமைய தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடுகள் விலகுவதன் காரணமாக அதனை ஜூன் 06 வரை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜூன் 30 வரை, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வாகனங்களுக்கான வருமான உத்தரவுப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளும்போது  அபராதம் அறவிடப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் motortraffic.wp.gov.lk இன் ஊடாக ஒன்லைன் மூலமாக, வாகன வருமான உத்தரவு பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sat, 05/29/2021 - 13:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை