நுவரெலியா வசந்தகால கடமைகளில் பணியாற்றிய பொலிஸாருக்கு கொரோனா

நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஐந்து பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் கண்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மக்களுக்கான சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த பொறுப்பதிகாரி கூறினார்.

எனினும்,பொலிஸ் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், ஏனைய அதிகாரிகளைக் கொண்டு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா வசந்த கால கொண்டாட்டங்களில் கடமை புரிந்தவர்களுக்கே கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதேவேளை நேற்று கண்டி மாவட்டத்தில் 84 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 56 பேருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Mon, 05/03/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை