தீவிரமடையும் யாஸ் சூறாவளி இன்று இந்திய கரையை கடக்கும்

மீனவர்களை கடலுக்கு செல்லாதிருக்க கோரிக்கை

இலங்கைக்கருகில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘யாஸ்’ சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

‘யாஸ்’ சூறாவளி இன்று 26ஆம் திகதி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள கரையை கடக்குமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Wed, 05/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை