கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம்

ஜூலை 10ல் ஆரம்பம்; நேற்று கன்னிக்கால் வைபவம்

 

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 24ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.  கொடியேற்றத்திற்கு 45 தினங்களுக்கு முன்னதாக நடைபெறும் மரபுரீதியான பாரம்பரிய கன்னிக்கால் அல்லது கொடிக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடும் சடங்கு நேற்று(27)அதிகாலை 4.30மணியளவில் கதிர்காமத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

கொரோனா சூழல் நிலவுகின்ற காரணத்தினால் சுகாதாரத் துறையின் உத்தரவுகளை பின்பற்றி 2021 ஆண்டு விழா ஜூலை 10 ஆம் திகதி தொடங்கி, பிரமாண்ட ஊர்வலத்துடன் ஜூலை 24 அன்று நிறைவடைவது பற்றி முடிவெடுக்கப்படும் என ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.

காரைதீவு குறூப் நிருபர்

Sat, 05/29/2021 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை