யாழ், மட்டு, மொணராகலையில் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்

யாழ், மட்டு, மொணராகலையில் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்-Isolation-Update-21-05-2021

இன்று (21) முற்பகல் 6.00 மணி முதல் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மொணராகலை மாவட்டங்களில் 9 கிராம அலுவலர் பிரிவுகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முள்ளியவலை, முல்லைத்தீவு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள 11 கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிப்பு.

அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, புத்தளம், அம்பாறை, காலி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் பிரதேசங்களும இன்று (21) முற்பகல் 6.30 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 05/21/2021 - 13:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை