குவான்தமாலா சிறைக்குள் போட்டி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு கைதிகள் தலை துண்டித்து கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குவெட்சல்டெனன்கோவில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் போதைக் கடத்தலுடன் தொடர்புபட்ட கும்பல்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலையில் 2,000க்கும் அதிகமான கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் 500 பொலிஸார் நிறுத்தப்பட்டதாக தேசிய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குவான்தமாலாவில் வன்முறைகளால் வருடாந்தம் சுமார் 3,500 பேர் வரை கொல்லப்படுவதோடு இதில் பாதி அளவானவை குற்ற கும்பல்களால் இடம்பெறுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Fri, 05/21/2021 - 14:42
from tkn