இலங்கையில் உள்ள 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அறிவித்தல்

இலங்கையில் உள்ள 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அறிவித்தல் -Above 55 year old elders with COVID-19 Symptoms should take medical

சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்ட, கொவிட்-19 அறிகுறிகள் காணப்படுபம், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு, கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாடட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தள்ளார்.

அவ்வாறான அறிகுறிகள் காணப்படும் நபர்கள் உடனடியாக மருத்துவர் ஒருவரினது ஆலோசனையை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கொவிட்-19 இனது, 3ஆம் அலை பரவல் மேலும் உச்சமடைந்துள்ள நிலையில், கொவிட் தொற்றினால் மரணமடைபவர்களில் பெரும்பாலானோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்களாக காணப்படுகினறமை காரணமாக, நோயின் ஆரம்பத்திலேயே அவர்களை அடையாளம் கண்டு, மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணுவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 05/20/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை