நாட்டில் சீரற்ற காலநிலை; திருகோணமலையில் 3 மீனவர்களுடன்படகு மாயம்

திருகோணமலையிலுள்ள திருக்கடவூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் படகில் 03 மீனவர்கள் இருந்ததாகவும் மாயமான படகைத் தேடி 20 படகுகள் காணாமல் போன பிரதேசத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.  

இந்தச் சம்பவம் குறித்து கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்கு தாம் அறிவித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.  

Wed, 05/26/2021 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை