மேலும் 20 இலட்சம் தடுப்பூசி இலங்கைக்கு

சினோபாம் கொரோனா தடுப்பூசி மேலும் ஒரு தொகை இலங்கை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி மேலும் 20 இலட்சம்  சினோபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, முதல் தடவை சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்ட நிலையங்களிலேயே இரண்டாவது டோஸையும் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளை ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Sat, 05/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை