- கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, யாழ்: 21 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்
நாட்டில் ஏப்ரல் புது வருடத்தை தொடர்ந்து தற்போது பரவி வரும் கொவிட்-19 பரவலின் 3ஆம் அலையைத் தொடர்ந்து, இதுவரை நாட்டின் 14 மாவட்டங்களில் உள்ள 138 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில் உள்ளன.
கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று (08) காலை முதல் 21 கிராம அலுவலர் பிரிவுகள் புதிதாக முடக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, குருணாகல் மாவட்டத்தின், குளியாபிட்டி பொலிஸ் பிரிவில் 19 கிராம அலுவலர் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் (08) புதிதாக முடக்கப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள்
நாட்டில் இதுவரை முடக்க நிலையில் உள்ள கிராம அலுவலர் பிரிவுகள்
நேற்றையதினம் (07) முடக்கப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள்
from tkn