பிலியந்தலை பொலிஸ் பிரிவு விடுவிக்கப்பட்டு சில கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்ல்
கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, நாட்டில் தற்போது வரை 12 மாவட்டங்களில் 65 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் (02) தனிமைப்படுத்தப்பட்ட பிலியந்தலை பொலிஸ் பிரிவு இன்று (03) காலை முற்றாக விடுவிக்கப்பட்டு, அங்குள்ள 8 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மட்டக்களப்பு, நுவரெலியா மாவட்டத்திலுள்ள 8 கிராம அலுவலர் பிரிவுகள் இன்று (03) காலை 8.15 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
from tkn