யுத்த வெற்றியின் 12ஆம் ஆண்டு; 452 இராணுவ அதிகாரிகள், 4,289 வீரர்களுக்கு தரமுயர்வு

யுத்த வெற்றியின் 12 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 4,741 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளைச் சேர்ந்த 452 அதிகாரிகளும் 4,289 வீரர்களும் அடங்குவதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி,இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தரமுயர்வு நேற்று18ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவிக்கிறது.

இதற்கமைய, 12 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 37 கேர்ணல்கள் பிரிகேடியர் தரத்திற்கும், லெப்டினன்ட் கேர்ணல்கள் 39 பேர் கேர்ணல் தரத்திற்கும், 40 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்ணல் தரத்திற்கும், 62 கெப்டன்கள் மேஜர் தரத்திற்கும், 61 லெப்டினன்கள் கெப்டன் தரத்திற்கும் 201 இரண்டாம் லெப்டினன்ட்கள் லெப்டினன்ட்களாகவே தரமுயர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வாரண்ட் அதிகாரிகள் – ii தரத்தைச் சேர்ந்த 83 பேர் வாரண்ட் அதிகாரிகள் – i தரத்திற்கும், பதவிநிலை சார்ஜென்ட்கள் 330 பேர் வாரண்ட் அதிகாரிகள் - ii தரத்திற்கும், சார்ஜென்ட்கள் 493 பேர் பதவிநிலை சார்ஜென்ட தரத்திற்கும், 1,095 கோப்ரல்கள் சார்ஜென்ட் தரத்திற்கும், லான்ஸ் கோப்ரல்கள் 1,168 பேர் கோப்ரல் தரத்திற்கும், 1,120 ப்ரைவட்கள் லான்ஸ் கோப்ரல்கள் தரத்திற்குமே தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

ஸாதிக் ஷிஹான்

Wed, 05/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை