இலங்கையில் இன்று காலை 6.00 மணி முதல் மேலும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டதோடு, உள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இன்று (13) முற்பகல் 6.00 மணி முதல், கம்பஹா, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கொழும்பு, அம்பாறை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thu, 05/13/2021 - 12:18
from tkn