நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை சூரியகந்தை பகுதியில் நேற்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படும் காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அக்கரைப்பற்று பகுதியிலிருந்து ஹற்றன் பகுதிக்கு சென்ற கார் நுவரெலியா – வலப்பனை பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் உள்ள நுவரெலியா இராகலை பிரதான வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காரில் இரண்டு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் இருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக இராகலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்)
from tkn