நாட்டிலுள்ள சகல வீடுகளுக்கும் தலா 05 மஞ்சள் மரக்கன்றுகள்

ஜனாதிபதியினால் தேசிய திட்டமாக ஆரம்பித்து வைப்பு

அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது.

நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், ஜனாதிபதி மிரிஹானவில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் ஒரு மஞ்சள் மரக்கன்றை நாட்டினார். வீட்டின் மஞ்சள் தேவையை தங்கள் சொந்த வீட்டுத் தோட்டத்திலிருந்து பூர்த்தி செய்வதற்காக, ஒரு குடும்பத்திற்கு 05 மஞ்சள் மரக்கன்றுகள் வீதம் 15 லட்சம் குடும்பங்களுக்கு கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன. உயர்தர கன்றுகளை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் உள்ள விவசாய திட்ட அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Mon, 05/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை