நிஷாந்த டி சொய்ஷாவின் இடத்திற்கு புதிய CID பணிப்பாளராக ரொஹான் பிரேமரத்ன

நிஷாந்த டி சொய்ஷாவின் இடத்திற்கு புதிய CID பணிப்பாளராக ரொஹான் பிரேமரத்ன-Rohan Premaratne Appointed As the New CID Director-Nishantha De Silva Transfered

- நிஷாந்த டி சொய்சா பொலிஸ் தலைமையத்திற்கு மாற்றம்
- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

CID யின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

CID பணிப்பாளராக கடமையாற்றிய நிஷாந்த டி சொய்ஷா, கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்  உத்தரவுக்கமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சேவையின் தேவை கருதி உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்ஷா, கடந்த வருடம் ஒக்டோபரில் குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 04/10/2021 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை