மலையகத்தில் மக்களின் நலன் கருதி அமைக்கப்படும் பொது நிறுவனங்கள் இன்று கவனிப்பாரற்று கிடக்கின்றன.
அந்தவகையில் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கமைய அமைக்கப்பட்ட பொகவந்தலாவை கெர்க்ஸ்வோல்ட் தோட்ட பிரஜாசக்தி நிலையமானது சுமார் 12 வருட காலமாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றன.
மலையக மாணவர்களுக்கு தொழில்பயிற்சி கல்வியை வழங்கும் நோக்குடன் 2008ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமானினால் இந்நிலையமானது அமைக்கப்பட்டது. கெர்கஸ்வோல்ட் தோட்டம் அதேபோல் சாஞ்சிமலை , வானகாடு , பொகவந்தலாவ நகர மாணவர்கள் என 5000 ற்கும் மேற்பட்டவர்கள் இந்த பிரஜா சக்தி நிலையத்தினை பயன்படுத்தி வந்தனர். இருந்த போதிலும் 2008ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களால் இந்நிலையத்தின் கண்ணாடி கல்லெறிந்து சேதபடுத்தப்பட்டு அதில் உள்ள உபகரணங்கள் அனைத்து திருடப்பட்டதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த ஆட்சிகாலத்திலும் எவரும் இதை கண்டு கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி புதிய அரசாங்கம் இதற்கு புத்துயிர் கொடுத்து திறக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(ஹற்றன் விசேட நிருபர்)
from tkn