வெலிக்கந்த பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து பிரியந்த கவிந்து அபேசூரிய நீக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவி நீக்கம் தொடர்பில் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் அதி விசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதேச சபை தவிசாளர் பிரியந்த கவிந்து அபேசூரிய குற்றமிழைத்துள்ளதாக, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரம விக்ரமாரச்சியினால் மேற்கொண்ட விசாரணை அறிக்கைக்கு அமைய, குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, அவ்வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fri, 04/02/2021 - 11:42
from tkn