இன்று (26) இரவு 8.00 மணி முதல் திருகோணமலை, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் உள்ள சில கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஆகியன தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
அதற்கமைய இன்றிரவு 8.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்:
- திருகோணமலை: பூம்புஹார்
- கம்பஹா: பொல்ஹேன, ஹீரலுகெதர, களுஅக்கல, அஸ்வென்னவத்த கிழக்கு
- களுத்துறை: மிரிஸ்வத்த , பெலவத்த வடக்கு, கிழக்கு
- தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்
Mon, 04/26/2021 - 15:24
from tkn