தோட்டத் தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினை; மேலதிக நிறை கொடுப்பனவு வழங்க மறுக்கும் கம்பனிகள்

- தொழில் திணைக்களத்தில் 12இல் பேச்சுவார்த்தை

பெருந்தோட்டங்களில் தேயிலை கொழுந்துக்கும் இறப்பருக்கும் மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க தோட்ட நிர்வாகங்கள் மறுத்ததையடுத்து இதற்கான ஒரு காத்திரமான தீர்வை ஏற்படுத்த எதிர்வரும் 12ஆம் திகதி பகல் 01.00 மணிக்கு தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது,

இ.தொ.கா. உபதலைவரும் சட்டத்தரணியுமான கா. மாரிமுத்து இது தொடர்பில் அனுப்பிவைத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க மறுத்த தோட்ட நிர்வாகங்களின் போக்கை ஆட்சேபித்து தொழில் ஆணையாளர் நாயகத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையையிட்டு உடனடி பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கம்பனிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் இத்தினமே இதற்கான ஒரு முடிவை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் சட்டத்தரணி கா. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

Sat, 04/10/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை