கைதாவதை தடுக்குமாறு கோரி ஹரின் மனு தாக்கல்

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் ஹரின் பெர்னாண்டோ எம்.பி, தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரியே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Wed, 04/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை