இந்தியாவின் நிலை குறித்து ஜனாதிபதி கவலை தெரிவிப்பு

பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி வைத்தார்

கொரோனா தொற்று அதிகரித்திருப்பதன் காரணமாக இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை இந்தியா மிக விரைவில் முறியடிக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தற்போதைய நிலை தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி, உங்களது திறமையான தலைமையின் கீழும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் உறுதியான ஆதரவோடும் இந்தியா விரைவில் நோய்க்கிருமியின் தற்போதைய அழிவைத் தடுக்குமென்று நான் நம்புகிறேன். கொரோனா தொற்றுநோயின் தற்போதைய அழிவை இந்தியா விரைவில் முறியடிக்கும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்தியாவின் சுகாதாரத் துன்பம் மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள புத்த மதகுருமார்கள் ‘இந்திய மக்களுக்கு ஆசிர்வதிக்க’ ரத்தனா சூத்ராவை ‘கருணையுடன் பாராயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பையும் உறவையும் நிரூபிக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Fri, 04/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை