ஆஸியை நோக்கி வலுப்பெறும் புயல்

மேற்கு அவுஸ்திரேலியாவை நோக்கி நகர்ந்துவரும் செரோஜா என்னும் புயல் வலுவடைந்துவருகிறது.

இந்த வேளையில், அவசரச் சேவைகள் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

புயலின் வேகம் அதிகரித்து வருவதாகவும், கடற்கரைக்கு அருகிலுள்ள இடங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

டென்ஹம் உள்ளிட்ட 5 கடலோர நகரங்கள் தற்போது விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புயலின் தீவிரம் 3ஆம் நிலைக்கு உயர்த்தப்பட்டது. அது, தொடர்ந்து தென்கிழக்குத் திசையை நோக்கி நகர்வதாகக் கூறப்பட்டது.

Mon, 04/12/2021 - 13:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை