அமெரிக்காவில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் அலுவலகக் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் பற்றிய மேலதிக விபரங்கள் உடன் வெளியாகவில்லை.

அமெரிக்காவில் கடந்த மாதம் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டனர். கடந்த மார்ச் 16 அன்று ஜோர்ஜியாவில் மசாஜ் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதோடு மார்ச் 22 ஆம் திகதி கொலராடோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர்.

நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாடுகளை கொண்டுவருவது பற்றி ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 04/02/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை