அமெரிக்காவின் சிகாகோவில் பொலிஸாரால் 13 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அந்த சம்பவத்தின் வீடியோ காட்சியை இரண்டு வாரம் கழித்து சிகாகோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஒன்பது நிமிடம் ஓடக் கூடிய பொலிஸாரின் உடலில் பொருத்தப்பட்ட கெமராவினால் எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு காரில் இருந்து அந்த அடையாளம் தெரியாத பொலிஸ் அதிகாரி இறங்கி வருவதையும் தொலேடோ என்ற சிறுவனை மடக்கி கைகளை உயர்த்தச் சொல்வதையும் பின்னர் துப்பாக்கியால் சுடுவதையும் காட்டுவதாக உள்ளது.
பின்னர் சுடப்பட்ட சிறுவன் சுருண்டு விழுந்து உயிரிழந்தான்.
இதேவேளை, குறித்த சிறுவனை துரத்திச் செல்லும் பொலிஸார் ஒரு இடத்தில் வைத்து சிறுவன் நிற்பதையும் அதன் பின்னர் தன்னிடமிருந்த பொருளொன்றை எடுத்து வீசுவதையும் காட்டும் மற்றுமொரு CCTV காட்சியை வெளியிட்டுள்ளதோடு, குறித்த இடத்தில் கைத்துப்பாக்கி ஒன்று இருப்பதை காண்பிக்கும் மற்றுமொரு பொலிஸாரின் உடலில் பொருத்தப்பட்ட கமெராவில் பதிவாகியுள்ள காடசிகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டான்ட் என்ற கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவத்தையடுத்து பொலிஸாரின் அராஜகத்தை விளக்கும் இன்னொரு வீடியோ காட்சியாக இது கடும் சர்ச்சைக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
from tkn