வெளி மாவட்டங்களுக்கான சுற்றுலா பயணங்களை தவிர்க்கவும்

- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டம் தற்போதைய சூழ் நிலையில் பாதுகாப்பாக உள்ள போதிலும், நாங்கள் கவனம் இன்றி நடந்து கொண்டால் எதிர் வரும் நாட்களில் நாங்கள் பாரதூரமான நிலையை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.எனவே மக்கள் உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டம் நேற்று முந்தினம் புதன்கிழமை(28) மாலை 4மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல்  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு வந்த 4நபர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

அவர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்ட போது அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது இந்திய மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வருவதாக குறித்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மீனவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், விழிர்ப்புணர்வையும் வழங்க ஆலோசித்துள்ளோம். மன்னார் மாவட்டம் தற்போதைய சூழ் நிலையில் பாதுகப்பாக உள்ள போதிலும், நாங்கள் கவனமின்றி நடந்து கொண்டால் எதிர்வரும் நாட்களில் நாங்கள் பாரதூரமான நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே கூடுதலாக ஒன்று கூடுவது,முகக்கவசம் அணியாது பயணம் மேற்கொள்வது போன்ற விடையங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் எமது சமூகத்தை பாதுகாக்க தனிப்பட்ட ஒவ்வொறு நபரும் இந்த விடயங்களில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் குறூப் நிருபர்

Fri, 04/30/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை