வெப்பவாயுவின் வெளியேற்றத்தை பாதியாகக் குறைக்க அமெ. திட்டம்

அமெரிக்கா 2030க்குள் வெப்ப வாயு வெளியேற்றத்தைப் பாதியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. பாரிஸ் பருவநிலை உடன்பாட்டின் ஓர் அங்கமாக அமெரிக்கா அந்தப் புதிய கடப்பாட்டை நிர்ணயித்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பாக இணையத்தில் நடத்தப்படும் இரண்டு நாள் கூட்டத்தில் உரையாற்றியபோது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அது பற்றி உறுதியளித்தார். உலகத் தலைவர்கள் பலரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பருவநிலை மாற்ற நெருக்கடிக்குத் தீர்க்கமான முடிவு காண்பதில் நடப்புப் பத்தாண்டு முக்கியமானது என்று பைடன் கூறினார்.

ஆனால், அவர் வழங்கியிருக்கும் உறுதிமொழி, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்கை விடக் குறைவானது. 1990 இல் இருந்ததை விட 2035க்குள் நிலக்கரிப் பயன்பாட்டை 78 வீதம் குறைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. அதை விடவும் அமெரிக்காவின் இலக்கு குறைவானது.

வெப்ப வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சீனா புதிதாக எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை. ஆனால், 2025இலிருந்து நிலக்கரி பயன்படுத்துவதைக் குறைக்க அது உறுதியளித்துள்ளது.

ஜப்பான் 2030க்குள் தனது இலக்கை ஒரு மடங்கு கூட்டியுள்ளது.

2050க்குள் வெப்ப வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்கப் போவதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.  

Sat, 04/24/2021 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை