உடப்பு ஆண்டிமுனை மீனவர் சிறுகடலில் விழுந்து மரணம்

உடப்பு, ஆண்டிமுனை பகுதியில் வசித்த ஒரு பிள்ளையின் தந்தையான கதிர்காமுத்தையா மணிநாதன் ( வயது 50)என்பவர் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை முந்தல் களப்பு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற வேளை களப்பில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.  

அவரது சடலம் நேற்று மாலை சிறு கடல் பகுதியில் சுமார் 10 கிலோ மீற்றருக்கு அப்பால் உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  

சம்பவ தினம் கணவன் கரைக்கு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த மனைவி உற்றார் உறவினர் உதவியுடன் ,பொலிஸ் நிலையத்தில் கணவனைக் காணவில்லையென முறைப்பாடு செய்துள்ளார்.  

இதனையடுத்து,உடப்பு பொலிஸ் மற்றும் கடற்படையினர் உதவியுடன் 31ஆம் திகதி புதன் காலை தொடக்கம் தேடுதல்கள் நடைபெற்றன.  இதன் போது தோணி, மற்றும் இயந்திரப் படகுளை பயன்படுத்தி தேடுதல்கள் நடத்தப்பட்டன.  

மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலும் தேடுதலின் பின்னர் சடலம் நேற்று மதியம் வரையும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் மீன்பிடியில் ஈடுபட்ட படகு முந்தல் ஆற்றோரப்பகுதியில் வலை மற்றும் உபகரணங்களுடன் கரையொதுங்கியுள்ளது.  நேற்று மாலை சிறு கடல் பகுதியில் சுமார் 10 கிலோ மீற்றருக்கு அப்பால் உருக்குலைந்த நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உடப்பு குறூப் நிருபர்      

Fri, 04/02/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை