'குழந்தையர் கொஞ்சுந்தமிழ்'

கிண்ணியா புலவர் மணி ஏ.எம். அப்துல் கஹ்ஹார் எழுதிய "குழந்தையர் கொஞ்சுந்தமிழ்" நூல் வெளியீடு அண்மையில் (ஏப்ரல் 12) கவிஞர் கஹ்ஹார் இல்லத்தில் இடம் பெற்றது.

கவிஞர் எம்.ஏ.அக்பர் சலீம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் கிண்ணியா நகரசபை தவிசாளர், டொக்டர் ஹில்மி மகரூப், நகர சபை உறுப்பினர் எம்.ஏ.கலிபத்துள்ளாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கிராஅத் - எப். முஸர்ரிப், வரவேற்புரை - கவிஞர் ஜே. பிரோஸ்கான் நூல் ஆய்வுரை - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் நயவுரை - கலாநிதி கே.எம்.எம். இக்பால் நிகழ்ச்சித் தொகுப்பு - ஏ.கே. முஜாரத் ஆகியோர் மேற்கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை எறும்புகள் கலை இலக்கிய மன்றம் மேற்கொண்டிருந்தது.

(திருமலை மாவட்ட விசேட நிருபர்)

Fri, 04/16/2021 - 17:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை