இளவரசர் இறுதிச் சடங்கு: அரச குடும்பத்தில் சர்ச்சை

- இன்று இறுதிக் கிரியை

காலமான இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கிற்கு இளவரசர் ஹரியும் இளவரசர் அண்ட்ரூவும் இராணுவச் சீருடை அணிய வேண்டுமா என்பது குறித்து இடம்பெற்ற விவாதத்தில் எலிசபத் அரசியார் தலையிட நேர்ந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பொதுவாக, அரசக் குடும்பத்தின் அதிகாரத்துவ நிகழ்ச்சிகளில் அரசக் குடும்ப உறுப்பினர்கள் இராணுவச் சீருடை அணிவது வழக்கம்.

பிரிட்டிஷ் இளவரசர் ஹரி அவரது அரசக் கடமைகளிலிருந்து விலகியுள்ளதால், இராணுவத்துடனான அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் தம்முடைய இராணுவச் சீருடையில் இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பியதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பில் வெளிவந்த தகவல்களுக்கு பக்கிங்ஹம் அரண்மனை பதிலளிக்க மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தில் 94 வயது எலிசபத் அரசியார் தலையிட்டு, அனைவரும் துக்கம் அனுசரிக்கும் உடைகளில் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்துள்ளதாக டெய்லி மெயில் செய்தி நிறுவனம் கூறியது. இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வாரம் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

99 வயதான அவரின் உடல் இன்று சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Sat, 04/17/2021 - 14:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை