நிரம்பி வழிந்த ஆலய தீர்த்தக் கிணறு

- மட்டக்களப்பில் அதிசயம்

மட்டக்களப்பில் கும்பாபிஷேகம் நடந்த போது ஆலயத்தின் தீர்த்தக் கிணறு பொங்கி வழிந்த அதிசயம் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மேற்கு அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில் அமையப் பெற்றிருக்கின்ற விக்னேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (31) கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இவ்வேளை ஆலய தீர்த்தக் கிணறு பெருக்கெடுத்து வழிந்த அதிசய நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இவ் அற்புத நிகழ்வை பக்திப் பரவசத்துடன் அடியவர்கள் போற்றி வணங்கியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்)

Thu, 04/01/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை