காணாமல்போன தந்தை மற்றும் மகனின் சடலங்கள் இராணுவத்தால் மீட்பு

காணாமல்போன தந்தை மற்றும் மகனின் சடலங்கள் இராணுவத்தால் மீட்பு-Troops Recover Remains of Missing Father & Son

ஹல்தும்முல்ல, வேலி ஓயாவில் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகனின் சடலங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

ஹல்தும்முல்லா, கலூபஹன பகுதியில் நேற்று (15) பிற்பகல் நீராடிக் கொண்டிருந்த நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த இருவரும் இன்று (16) முற்பகல் 11.00 மணியளவில் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலான தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பின்னர் குறித்த சடலங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

மஹரகமவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் வாகனமொன்றில் புத்தாண்டு விடுமுறைக்காக பதுளைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​வேலி ஓயாவில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

தாய், தின்பண்டங்களை வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் தாய் திரும்பி வருவதற்கு முன்னதாக குளிப்பதற்காக நீரில் இறங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் வலுவான நீரோட்டத்தில் சிக்கி திடீரென அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஆயினும், மகள் அங்கிருந்த பொதுமக்களின் உதவியினால் ஒரு கொடியொன்றை பிடித்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஆயினும் குறித்த மலைப்பகுதிகளில் ஏற்பட்ட மழையின் காரணமாக காணப்பட்ட பாரிய அலைகள் காரணமாக, அவரது தந்தையும் சகோதரரும் சம்பவ இடத்திலிருந்து தொலைவிற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய, SF Commander-Central வழங்கிய வழிகாட்டலுக்கமைய, SFHQ-Central படைவீரர்களால் நேற்று (15) பிற்பகல் முதல் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

குறித்த இருவரும் நீர் வழிப்பாதையில் தாழ்வான பகுதிகளை நோக்கி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதன் அடிப்படையில், கடந்த 18 மணிநேரமாக இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இன்று (16) காலை குறித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Fri, 04/16/2021 - 18:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை