அரிய பழ தாவர கன்றுகள் இலவசமாக வழங்க திட்டம்

வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைகளுக்காக அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறான பழக் கன்றுகள் பயிரிடும் போது அதற்குத் தேவையான ஆலோசனைகளை ஐந்து வருடங்கள் வரைக்கும் இலவசமாக வழங்குவதாகவும் அவர் கூறினார்.

இலவசமாக வழங்கப்படுகின்ற இந்த பழ கன்றுகளின் உற்பத்தி குறித்து ஒவ்வொரு ஆறு மாதமும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக தகவல்களை 071 375 62 13 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

Mon, 04/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை