கொழும்பில் கோர விபத்து: பன்னிப்பிட்டிய சந்தியில் இரண்டு இளைஞர்கள் பலி

கொழும்பு, பன்னிப்பிட்டிய, பொல்வத்தை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். நேற்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவத்துகொடையிலிருந்து வந்த மோட்டார் வாகனமொன்று பொல்கட்டுவ வீதியில் திருப்ப முயற்சித்த போது பன்னிப்பிட்டிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றைய இளைஞர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் எட்டியாந்தோட்டை, மலல்கொட பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய கசுன் பண்டார மற்றும் மீகொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பிரபோத மதுஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 
Sat, 04/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை