தேர்தல் சீர்திருத்தங்களை ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழு

பிரதமர் முன்மொழிவு; திங்களன்று சபையில்

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்காக பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ள பிரேரணை எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

இந்தப் பிரேரணை அன்றைய தினம் பிற்பகல் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போது சபை முதல்வர் மற்றும் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இந்த விசேட குழு 15 உறுப்பினர்களை கொண்டமையவுள்ளதுடன், சபாநாயகரினால் குழு நியமிக்கப்பட்டதை அடுத்து 06 மாதங்களில் அதன் பரிந்துரைகளை வழங்க வேண்டுமென பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதும் தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதும் இக்குழுவின் பொறுப்பாகும்.

சுப்பிரமணியம் நிசாந்தன்

Fri, 04/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை