அனைத்து வங்கிகளும் நாளை திறந்திருக்கும்

அனைத்து வங்கிகளும் நாளை திறந்திருக்கும்-All Bank Will Remain Open Tomorrow April 12

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (12) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சினால் நாளைய தினம் (12) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது வங்கி விடுமுறை அல்ல என, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

புத்தாண்டை கொண்டாடும் பொதுமக்களின் வங்கி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது நலன் கருதியும், தொடர்ச்சியாக சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய், புதன்கிழமைஆகிய நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை தினங்களாக அமைவதால்  குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 04/11/2021 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை