பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகள் கிடையாது

- மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு PCR

பண்டிகைக் காலப்பகுதியில் பயணக்கட்டுப்பாடு அமுலாகுமா  என்பது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அவ்வாறான பயணத்தடை விதிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார். 

எனினும் எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை 200இற்கும் குறைவாகவே உள்ளது. தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு இன்னும் ஒரு வாரம் மாத்திரமே உள்ளது. 

கொழும்பு மாவட்டத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு பயண கட்டுப்பாடு விதிப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. எனினும் PCR அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்ய வாய்ப்பு உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Wed, 04/07/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை