தனிமைப்படுத்தலை அறிந்து தப்பிச்சென்ற திருமலை மக்கள்

திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே அப்பகுதியைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பூம்புகார் கிராம சேவகர் பிரிவு 26ம் திகதி இரவு 8மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக, நேற்றுமுன்தினம் பிற்பகல் அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பையடுத்து, அங்குள்ள பெரும்பாலானோர் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்த்துள்ளனர். 

நேற்றுமுன்தினம் மாலை 05.00மணி முதல் இரவு 07மணிவரை இப் பகுதியில் பாதுகாப்புப் பிரிவினர்கள் எவரும் பிரதேசத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லயென்பதால் இவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பொலிஸார் எவரேனும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் இந்த நிலைமையை தவிர்த்துக்கொள்ள முடியுமானதாக இருந்திருக்கமென இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

ரொட்டவெவ குறூப் நிருபர் 

Wed, 04/28/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை