வெளிநாடுகளிலிருந்து திரும்புவோர் அனுமதி பெறுவது அவசியமில்லை

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் நோய்த் தொற்று பரவுகை காரணமாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை காணப்பட்டது.

எனினும் இனி வரும் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இவ்வாறு வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெற வேண்டியதில்லை என இராணுவத் தளபதி கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Wed, 04/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை