ரமழான் நோன்பாளிகளுக்கும் 5,000 ரூபா நிவாரணப் பணம்

குறைந்த வருமானம் பெறும் ரமழான் நோன்பாளிகளுக்கும் 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதனைப் பெற்றுக்கொள்வதற்கு இறுதித் திகதி இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார். சமுர்த்தி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கிராம சேவையாளர் பிரிவுகள் மட்டத்தில் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டத்தை பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும்இணைந்து அமுல்படுத்துகின்றன.

சமுர்த்திப் பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், வயோதிபர்கள், விசேட தேவையுடையவர்கள், சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவைப் பெறுபவர்கள், 100 வயதை எட்டியுள்ள வயோதிபர்களுக்கான கொடுப்பனவைப் பெறும் குடும்பங்களுக்காக இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

புத்தாண்டுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு இக் கொடுப்பனவை வழங்க முயற்சிக்கப்பட்ட போதிலும் முடியாமல் போயுள்ளது. இதனால் பணம் கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதுவரை நாடு முழுவதுமுள்ள சமுர்த்திப் பயனாளர்கள் 18 இலட்சம் பேருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் கொடுப்பனவைப் பெறத் தகுதியானவர்கள் வியாழக்கிழமை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 04/17/2021 - 06:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை