திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 21 பேர் உள்ளிட்ட 25 பேருக்கு கொரோனா!

திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 21 பேர் உள்ளிட்ட 25 பேருக்கு கொரோனா!-25 Including 21 Jaffna Thirunelvely Market Cluster Tested Positive for COVID19

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று (14) புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார் .

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன  அதில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள் , பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 21 பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது .

அதேவேளை வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இருவருக்கும் (இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்) கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், (சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்) மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்குமகா 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

Thu, 04/15/2021 - 11:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை