யாழ். கொழும்பு கடுகதி ரயிலில் மோதி 16 எருமைகள் பலி

வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று காலை கடுகதி ரயிலில், மோதுண்டு 16எருமை மாடுகள் பலியாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில், ஓமந்தை பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மோதியுள்ளன.  

இதன் காரணமாக பல இலட்சம் பெறுமதியாக 16 எருமை மாடுகள் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளன.   வவுனியா மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவை வீதியோரங்கள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில், இரை தேடி வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை விசேட நிருபர்    

Fri, 04/23/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை